நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்ண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசையில் உருவான இப்படத்தின் பிஜிஎம், இன்றும் பலரது ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு அங்கமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். அதன்படி ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ’ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
Teaser:https://t.co/jZHVaTFRAc
"A Pandyaa Western" Story
XXing In Theatres this Diwali #APandyaaWestern#JigarthandaDoubleXTeaser#DoubleXDiwali@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @NimishaSajayan…
— karthik subbaraj (@karthiksubbaraj) September 11, 2023
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எப்போதும் புதுமையை கையாளும் வகையில் கதையை சித்தரிக்கும் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்திலும் தனது கடமையை செய்ய தவறவில்லை என்பது டீசரை பார்த்தால் சற்று புரிகிறது. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில், சித்தார்த் இயக்குநராக நடித்தது போலவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பது போலவும், பாபி சிம்ஹா போல ராகவா லாரன்ஸ் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் படத்தில் வைக்கப்பட்டுள்ள எதிர்பாராத திருப்பங்களுக்கு நாம் தீபாவளி வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.