திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாடங்களை நடத்த ஆசிரியர்களை நியமிக்க ஒவ்வொரு மாணவரும் ரூ.500 தர வேண்டும் என தலைமை ஆசிரியர் கேட்டதாகக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவ-மாணவிகள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, அந்த பள்ளியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கீழ் அன்பில் ஆதி திராவிடர் அரசு
மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
பயின்று வந்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால்
தற்போது பள்ளியில் சுமார் 200 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அப்பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திருச்சி
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். தங்களது பள்ளியில் தற்போது பல்வேறு பாடங்களுக்கு பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை என்றும் தலைமை ஆசிரியையிடம் கேட்டால் அவர் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் 500 தந்தால் மட்டுமே ஆசிரியரை நியமிக்க முடியும் என கூறுகிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக நேற்று
சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதாகவும் குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம் குறித்து உடனடியாக தான் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியிடம் பேசுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
இந்த அன்பில் பகுதி என்பது தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்
நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.