‘மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டும்’ – ஆளுநரைச் சாடிய சிபிஐ(எம்)

பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடிப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள…

பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடிப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது எனத் தெரிவித்துள்ள அவர், உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கவும் தொடர்ந்து முயல்கிறார் எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘சிறு முதலீட்டுத் திரைப்படங்களை வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடச் சட்டம் கொண்டுவர வேண்டும்’ – நடிகர் பாக்யராஜ்’

மேலும், இந்த பின்னணியில்தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைக் குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் ஆதிக்கத்தை சி.பி.ஐ(எம்) வன்மையாகக் கண்டிக்கிறது எனவும், மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/kbcpim/status/1561215463312347136

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.