பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அண்மைச் செய்தி: ‘மீண்டும் அதிகரிக்கும் கொரோனோ தொற்று’
இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 இல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை, 2,13,893 பேர் எழுதிழுதியிருந்தனர். இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் trb.tn.nic.in இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்








