மது, புகை, ஆன்லைன் சூதாட்டம் மக்களை அதிகம் பாதிக்கிறது. எனவே, இதனை தடுக்க கடுமையான சட்டம் தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மேட்டூர் உபரி திட்டத்தை விரிவுப்படுத்தி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் திராவிட கட்சிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிட்டு வருகின்றன. ஆனால், நாங்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு திட்டம் வைத்து உள்ளோம் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், சேலம் இரும்பாலை வளாகத்தில் ராணுவ தளவாட மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்த அவர், சேலம் மாநகராட்சி திட்ட கழிவு மேலாண்மை முழுமையாக செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் சூட்டாத்திலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் எனவும், ஆன்லைன் சூட்டாத்தால், தொடர் உயிரை மாய்த்துக் கள் நடைபெற்று வருகின்றது எனவும், இது மிகப்பெரிய பாதிப்பு என குறிப்பிட்டார். மேலும், இதனை தடுத்த தனி சட்டம் இருந்தும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ள கடுமையான சட்டம் தேவை என குறிப்பிட்டார்.
அண்மைச்செய்தி: ‘முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு; பஞ்சாப் மாநில அரசு’
மது, புகை, ஆன்லைன் சூதாட்டம் மக்களை அதிகம் பாதிக்கிறது. எனவே, இதனை தடுக்க கடுமையான சட்டம் தேவை என தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகின்றது. ஆனால், தமிழகத்தில் பாஜக சிறிய கட்சிதான் என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதாக சொல்கின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. உண்மையான எதிர்கட்சி பாமக தான் என தெரிவித்தார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக அண்ணாமலை போராட்டம் நடத்துவரா? என கேள்வி எழுப்பிய அவர், முடியாது அங்கு பாஜக கட்சி ஆட்சியில் உள்ளது என சாடினார். மேலும், கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில், குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டனர் என தெரிவித்த அவர், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.