26 C
Chennai
December 8, 2023
இந்தியா செய்திகள்

சீரமைப்பு பணி காரணமாக புதுச்சேரி – ஹௌரா அதிவிரைவு ரயில் ரத்து!

புதுச்சேரியிலிருந்து இன்று ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயில் சேவை
ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தால் சேதமடைந்த ரயில் வழித்தடங்களைச் சீரமைக்கும் பணி காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 3 தேதி நாடே சற்றும் எதிர்பாராத வகையில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் உட்பட விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சுமார் 285 பேர் உயிரிழந்தனர்; 900பேர்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மூன்று நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர், ரயில்வே துறையினர் மற்றும் விமான படையினர் தீவிரமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் மூன்று தண்டவாளங்களும் சேதமடைந்தது. 100க்கும் மேற்பட்ட ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூன் 14) மதியம் 2.15
மணிக்கு ஹௌரா செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12868) சீரமைப்பு பணி காரணமாக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy