திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்கிறோம். பிரதமர் பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டையை நோக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு முன்பாக பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் எதிரி ஆர்.எஸ் பாரதி தான் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சொன்னதை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், சொன்னதை செய்யாததால் தான் இந்த போராட்டம் என தெரிவித்த அண்ணாமலை, முழு பூசணிக்காயை சோற்றில் முதலமைச்சர் மறைப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இன்னும் 750 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என்றும், விடியா அரசை இத்தோடு விடப்போவதில்லை என்றும், வீடு முழுவதும் கஞ்சா, தலைநகரம் முழுவதும் கஞ்சாவாக மாறி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை கனவிலும் கூட திமுகவால் மீட்க முடியாது என தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதனை எப்படி மீட்பது என தெரியும் என கூறினார்.
அமைச்சர்கள் தப்பித்தவறி பேசும் ஆங்கிலத்தை பார்க்க பயமாக உள்ளது என தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை பார்த்து பிரதமர் பயந்து போயிவிட்டார் என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மட்டுமல்ல தமிழகமே பயந்துவிட்டது என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி தொடங்கிவிட்டது என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி’
மேலும், எங்களுக்கும் மீடியாவுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. மீடியா என்கிற போர்வையில் இருக்கும் திமுகவினருடன் தான் பிரச்னை என தெரிவித்த அவர், மீடியாவுக்கான மரியாதை 3 மடங்கு கிடைக்கும். ஆனால், ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்ட வேண்டும் என்றால் அது முடியாது என கூறினார். எங்கள் கோரிக்கையை ஏற்று பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை என்றால் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை எனில் திருச்சியை நோக்கி பாஜகவினர் வருவார்கள் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். இல்லையெனில், திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 20 நாட்களுக்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும், திமுகவின் நினைப்பு திமுகவுக்கு அஸ்தமனத்தை தரப்போகிறது என விமர்சித்தார். மேலும், திமுகவா பாஜகவா என்பது இரண்டு வருடங்களில் தெரியவரும் என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.