நடிகை அனுசுயா பாரத்வாஜ் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா பாரத்வாஜ். ஹைதராபாத்தை சேர்ந்த அனுசுயா செய்தி வாசிப்பாளராகவும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும் இருந்து வருகிறார். வேதம் மற்றும் பைசா ஆகிய படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கஷ்ணம், காயத்ரி, ரங்கஸ்தலம், யாத்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனுவாக நடித்திருக்கும் சுனிலின் மனைவியாக நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். தொகுப்பாளினியாக இருந்து நடிகையான உயர்ந்த இவருக்கும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரிலீஸ் ஆனபோதே பிரச்னை எழுந்தது. அந்தப் படத்தை அனசுயா, விமர்சித்ததால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர்.இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தையும் மறைமுகமாக கிண்டலடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அனசுயா. கோபமடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், அனசுயாவை ‘ஆன்ட்டி’ என ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்த ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் டிரென்ட் ஆனது. இதனால் எரிச்சலடைந்த அனசுயா, தன்னை ‘ஆன்ட்டி’ என விமர்சித்தால், அந்தப் பதிவுகளை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வழக்குத் தொடுப்பேன் என்று எச்சரித்தார். மேலும் தன்னை ‘அக்கா’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்ற அழைக்கக் கூடாது, அனசுயா என்றே அழைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் சமீப காலமாக அனுசுயாவின் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஆபாசமாக போஸ் கொடுத்தபடி சமூகவலைதளங்களில் வெளியான புகைப்படங்களை பார்த்தவர் அனுசுயாவை கடுமையாக விமர்சித்தனர். இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அனுசுயா தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நடிகைகளில் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தது ஆந்திரா மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கடராஜு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதான ராம வெங்கட ராஜு துபாயில் பிளம்பராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பியது தெரியவந்துள்ளது. அவரது லேப்டாப்பில் நடிகைகள் விஷ்ணு பிரியா, ரோஜா, ரஷ்மி, பிரகதி போன்றோரின் புகைப்படங்கள் இருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் பதிவிட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.