கர்ப்பமாக உள்ள பெண்கள் 12 வாரத்துக்குள் (3 மாதத்திற்குள்) ‘பிக்மி’ (PICME – Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) எண் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், கடந்த 2017-ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் இந்த சேவை கட்டாயமாக்கப்பட்டது.
கர்ப்ப கால அறிகுறிகள் முதல் குழந்தை வளர்ப்பு வரையிலான சந்தேகங்களை போக்கும் வகையில், இந்த தொடர் கட்டுரை பகுதியை எழுதி வருகிறோம். அதன்படி, அண்மையில், எழுதப்பட்ட ‘பெண்களின் கர்ப்பம் கண்டறியும் முறை’, ‘கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள்’, ‘கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகள்’ என்ற மூன்று பகுதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம், அதன் தொடர்ச்சியாக இந்த பகுதியில், ‘‘பிக்மி’ எண்ணின் அவசியம்’ குறித்து தெரிந்து கொள்வோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2017-ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில், கட்டாயமாக்கப்பட்ட இந்த சேவை, தாய் மற்றும் சேய் இருவருக்கும் தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்கிறது. இந்த எண்ணை பெற, தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். உரிய பரிசோதனைகளை அங்குள்ள செவிலியர்கள் மேற்கொண்டு உங்களுக்கு ‘பிக்மி’ (PICME) அடையாள அட்டையை வழங்குவார்கள்.
இதை பதிவு செய்வதன் மூலம், தேவையான கர்ப்பகால ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சை, தொடர் பராமரிப்பு, ஊட்டச்சத்து பொருட்கள், நிதி உதவி ஆகியவை கிடைக்கிறது. அத்துடன், இந்த எண் இருந்தால் தான், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த PICME அடையாள எண்ணை, வீட்டில் இருந்தபடியே, https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதள முகவரி மூலமாகவும் கர்ப்ப விவரங்களை பதிவுசெய்துகொள்ள முடியும். இருப்பினும் மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிவு செய்வதே சிறந்தது. ஏனெனில், அப்போதுதான் முறையான ஆலோசனைகள் அங்குள்ள அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பெற உதவியாக இருக்கும்.
அண்மைச் செய்தி: ‘‘உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்க கூடாது’ – முதலமைச்சர்’
மேலும், இந்த சேவையின் மூலம் எங்கு இருந்து வேண்டுமானாலும் தேவையான ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு கணவர் வீட்டில் இருந்து பதிவு செய்தால், அங்கு இருந்து தான் பார்க்க வேண்டும் இல்லை, தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்த்துக்கொள்ள முடியும். தேவைப்படும் ஆலோசனைகளை 102 அல்லது 104 என்ற எண்ணிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெற PICME அடையாள எண் கட்டாயம் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பவர்களுக்கும் இந்த PICME அடையாள அட்டை பெறுவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ‘பிக்மி’ எண் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் உதவிகளும், ஊட்டச்சத்து பெட்டகம் அவர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.