நாளை கூடுகிறது மநீம கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம்!

மநீம செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் வௌக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைடையில் வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.