பொதுப்பணிக்காக செலவிடுவதற்கான நிதி இல்லாததால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்க அரசுப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி வரை அரசுக்கு நிதி வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதாவை அமெரிக்க செனட் அவை அங்கீகரித்திருந்த போதிலும் அதனை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை இடைக்கால மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் உள்ளது. இது உலக சந்தையில் எதிரொலிக்கலாம் என அஞ்சப்படுகிறது
.
ஒருவேளை, அமெரிக்க அரசு நிதியின்றி முடங்கினால், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல போகலாம். விமான சேவை முதல் பலவும் முடங்கும் நிலை ஏற்படலாம். அமெரிக்க அவையில், எதிர்க்கட்சியினரின் கை ஓங்கிவருவதன் எதிரொலியாக இந்த சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசு செலவழிக்கும் அனைத்து தொகைக்கும் இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இரு அவைகளும் ஒப்புதல் அளித்த பிறகு அதிபருக்கு ஒப்புதலுக்கு செல்லும்.
அரசு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான காலக் கெடுவை இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.