ஆளுநர் தனது வேலையை தவிர மற்ற வேலைகளை செய்வதோடு, பல்வேறு கருத்துக்களை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்திகிறார் என திரைபப்ட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீலம் கலாச்சார மையம் சார்பில் தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானம் கலைத் திருவிழா-பி.கே.ரோசி திரைப்பட திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் நாளை மறுநாள் வரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை பேசும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனறது. அதன் துவக்க நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மற்றும் தியாகராஜன் குமாரராஜா, ஷான் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தலித் மாதம் கொண்டாடப்படுவதன் நோக்கமே மறைக்கப்பட்ட வரலாறை தெரிந்து கொள்வது. சமகால சூழலில் தலித்கள் பங்கு என்னவாக இருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது, இதை தனியாக அடையாளங்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை காட்டுகிறோம். வரலாற்றை யார் எழுதுகிறார்கள். வரலாற்றில் நாம் யார்? எது கலாச்சார புரட்சி? நிறைய இடங்களில் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார்கள் என்பது பல இடங்களில் நடக்கிறது என்று கூறினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், ஸ்டெர்லைட் தொடர்பாக ஆளுநர் கருத்து தெரிவித்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநர் தனது வேலையை தவிர மற்ற வேலைகளை செய்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இது தவறானது என்றார்.
மேலும் அவர் பேசுகையில், தங்கலான் படம் 80 சதவீதம் முடிந்து விட்டது. மே மாதம் மற்ற வேலைகள் முடிந்து விடும். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். vfx வேலைகள் நிறைய உள்ளன என்றும், கமல்ஹாசன் உடன் இணையும் திரைப்படம் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் தான் போய்க் கொண்டு உள்ளது.
சார்பட்டா பரம்பரை 2-ம் பாகமும் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் தான் நடந்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் ட்வீட் குறித்து பேசியவர், வாய்ப்பு இருந்தால் சந்தோஷ் நாராயணன் அவருடன் இணையலாம். அவர் நல்ல மனசுகாரர் அதனால் வாழ்த்து சொன்னார். தற்போது வரை அவருடன் இணைவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
ரோகிணி திரையரங்கில் நடந்தது மட்டும் தான் வெளியே தெரிகிறது. மற்ற இடங்களில் நடப்பது தெரியவில்லை. புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக சீமான் பேசிய கருத்து தொடர்பாக பதில் அளித்தவர், எல்லாருக்கும் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி அமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அதிலும் சில பொது பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் அவர்களுக்காக தனியாவாவது குடிநீர் தொட்டி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார்.