பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடைபெறும் என்றும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: “கீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா”
இதனையடுத்து பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.