சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சென்னை பெசண்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் இன்று மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காலை முதல் ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை ராயபுரம் மண்டலத்தில் 51-வது வார்டுக்கு உட்பட்ட ஆயிரத்து 174-வது வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக திமுக – அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில், ராயபுரம் சென்னை உருது உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தற்போது மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றங்களை தவிர்க்க, வாக்குச்சாவடியை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியின் 25-வது வார்டுக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.