ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் ரயில்வே பயணிகளை குறி வைத்து நூதன மோசடியை அரங்கேற்றும் கும்பல்!

ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் ரயில்வே பயணிகளை குறி வைத்து நூதன மோசடி நடைபெறுவதாகவும் எனவே டிக்கெட் புக் செய்யும் போது கவனமுடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்கு சேவை…

ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும் ரயில்வே பயணிகளை குறி வைத்து நூதன மோசடி நடைபெறுவதாகவும் எனவே டிக்கெட் புக் செய்யும் போது கவனமுடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் அரசு சேவை, வங்கி சேவை இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளிட்டவற்றை குறி வைத்து போலியாக உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் கும்பலின் கைவரிசை அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் பயனாளர்களை குறி வைத்து நூதன முறையில் மோசடிகளை அரங்கேற்ற தொடங்கி உள்ளது மோசடி கும்பல்.

பொதுவாக ஐ ஆர் சி டி சி என்ற இணையதளத்தின் மூலமாகவும் செயலிகள் மூலமாகவும்
பொதுமக்கள் ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். இந்த ஐ ஆர்
சி டி சி இணையதளம் மற்றும் செயலியை போலியாக உருவாக்கி வங்கி தகவல்கள் மற்றும் செல்போனில் உள்ள தகவல்களை திருடி மோசடி செய்யும் சைபர் கிரைம் கும்பல்
பொதுமக்களை குறி வைத்துள்ளதாக ஐ ஆர் சி டி சி மற்றும் தமிழக சைபர் கிரைம்
பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது.

குறிப்பாக irctc.co.in என்ற இணையதள முகவரியில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு
சிறு மாற்றத்தை செய்து போலியாக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மோசடி
நடைபெறுகிறது. இந்த போலி இணையதள பக்கத்தின் லிங்குகள் வாட்ஸ்அப் மற்றும்
telegram வழியாக பொதுமக்களை சிக்க வைக்க பயன்படுத்தப்படுகிறது.

இதேபோன்று ஐ ஆர் சி டி சி ரயில் கனெக்ட் என்ற அதிகாரப்பூர்வ செயலி ஒன்று
போலியான செய்திகளையும் whatsapp மற்றும் telegram மூலமாக பொதுமக்களுக்கு ஆசை
வார்த்தை காட்டி பதிவிறக்கம் செய்ய வைத்து மோசடி நடைபெறுகிறது. இதுபோன்று
கவர்ச்சிகரமான விளம்பரங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்தால்
டிக்கெட்டுகள் உடனடியாக புக் ஆகிவிடும் என்றும் பரிசுகள் கிடைக்கும் மற்றும்
டிக்கெட் விலையில் தள்ளுபடி கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி போலி செயலி
மற்றும் இணையதளத்திற்குள் பொதுமக்களை சைபர் கிரைம் மோசடி கும்பல் சிக்க
வைப்பதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலி மற்றும் இணையதளத்திற்கு நுழைந்து பார்க்கும் பொழுது உண்மையான
இணையதளம் மற்றும் செயலில் உள்ளது போன்ற பக்கங்கள் இருப்பதால் பொதுமக்கள் நம்பி பல்வேறு தகவல்களை பதிவிடுகிறார்கள். இதன் மூலமாக வங்கி தகவல்கள்
உள்ளிட்டவற்றைபெற்றுக்கொள்ளும் மோசடி கும்பல் கணக்கிலிருந்து பணத்தை
திருடுகிறது.

மேலும் apk என்ற அமைப்பில் எளிதில் செயலிகளை டவுன்லோட் செய்யலாம் என
குறுஞ்செய்தி அனுப்பும் மோசடி கும்பல், செயலிகளை பதிவிறக்கம் செய்தவுடன்
உண்மையான செயலி உள்ளது போல் செயல்படும் எனவும் ஆனால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது மறைமுகமாக டேட்டாக்களை திருடும் அளவிற்கான செயலிகளும் பதிவிறக்கமாகி செல்போனில் உள்ள வங்கித் தகவல்கள் மற்ற தகவல்களை திருட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்

எனவே ஐ ஆர் சி டி சி அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மற்றும் ஐ ஆர் சி டி சி
ரயில் கனெக்ட் என்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது கவனமாக
பயன்படுத்துமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். Whatsapp
telegram போன்றவற்றின் மூலமாக வரும் லிங்குகளில் செயலிகளை பதிவிறக்கம்
செய்யாமல், கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செல்போனில் நமக்குத் தெரியாமல் மறைமுகமாக செயலிகள் பதிவிறக்கம் ஆவதை தடுக்கும் வகையிலான அமைப்பை செல்போனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். Otp பின் மற்றும் பாஸ்வேர்டு போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.