சூர்யா – சமந்தா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது அஞ்சான்.
இந்நிலையில் இப்போது அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் படம் ரி ரிலீஸுக்காக மீண்டும் ஒருமுறை எடிட் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அஞ்சான் திரைப்படம் ரி ரிலீஸிலாவது ரசிகர்களைக் கவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.