செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (45). இவருக்கு திருக்கழுக்குன்றம் பகுதியில், கிணறு பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் உள்ள நிலையில் இவரது நிலத்திற்கு அடுத்ததாக உள்ள கிராம பஞ்சாயத்து கிணற்றுக்கு மின் இணைப்பு தருவதற்காக இவரது அனுமதியை பெறாமல் பம்பு செட்டின் மேற்கூரையை உரசி செல்லும் வகையில் மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஆபத்தான போக்கில் மின் வயரிங் வேலை செய்ததால் அந்த மின்வயர் வேலாயுதத்தின் பம்பு செட்டின் மேற்கூரையில் உரசி தீப்பற்றி எரிந்து பம்பு செட் சாம்பலானது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு, ஏற்கனவே உனது
நிலத்தையொட்டி வயரிங் செய்யும் பொழுதே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியதுதானே என அதிகாரிகள் அலட்சியமாக பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இடுப்பில் அரைத்துண்டன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்க வந்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
—–ரூபி.காமராஜ்