அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக தலைமை வற்புறுத்தியதால் அக்கட்சியுடனான கூட்டணி முறிந்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாரதிய ஜனதா, தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து 2021- சட்டமன்ற தேர்தலை சந்தித்து 4- சட்டமன்ற
உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் அதிமுகவை பற்றியும் அவ்வப்போது விமர்சித்து பேசி வந்தார். இது கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அண்ணாமலை முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி பேசியது கடும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றதது. இதனை அடுத்து இனி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அருகே குருவரெட்டியூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் அதிமுக பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:
வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளியிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல
முடியும். அண்ணாமலை சின்ன பையன். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை வற்புறுத்தியது என்றும், இதுதான் பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் எனவும் கூறியுள்ளார்.







