ஏப்ரல் 6ம் தேதி முதல் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு தொடக்கம்!

கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல்த் துறை தொடங்கவுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்…

கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக
தொல்லியல்த் துறை தொடங்கவுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 9 ஆம் கட்ட
அகழாய்வு பணிகள் எப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அகழாய்வு பணிகளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் 9ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம்
வரை நடைபெற உள்ளது. கீழடியில் 110 ஏக்கர் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம்
ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் 3 கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறையும், அடுத்த 5 கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியுள்ளது. கீழடியுடன் கங்கைகொண்ட சோழபுரம், பட்டறைப்பெரும்புதுார், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி,
பூதிநத்தம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.