32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கி சிறப்பித்தார். குறிப்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதே போன்று வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் கணினித்துறை பேராசிரியர் முனைவர் டபிள்யூ. பி. வசந்தா கந்தசாமி-க்கு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா. முத்தமிழ்செல்வி-க்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

இதே போன்று முதலமைச்சரின் நல் ஆளுமை விருது 3 துறைகளை சேர்ந்தோருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக, முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்- கண்காணிப்பு செல்லிட செயலி – தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போன்று ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய சிகிச்சை மேற்கொண்டதற்காக சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணி ராஜனுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. மேலும் பள்ளிக்கூடத் திட்டம்  மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணனுக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

இதனை அடுத்து மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டது.

1. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் சென்னையை சேர்ந்த மருத்துவர் த.ஜெயக்குமாருக்கு விருது வழங்கப்பட்டது.

2. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனம் என்கிற பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தி நிலையத்திற்கு விருது வழங்கப்பட்டது.

3. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் என்கிற பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த ரத்தன் வித்யாகர் என்பவருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

4. மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் என்கிற அடிப்படையில் மதுரையை சேர்ந்த டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.

5. சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வு செய்யப்பட்டது.

இதே போன்று சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது இருவருக்கு வழங்கப்பட்டது. அதன்படி,

1. மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் என்கிற அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி நிறுவனத்துக்கும்,

2. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த D. ஸ்டான்லி பீட்டர்-க்கு மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பின்னர் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம் என்கிற அடிப்படையில் 9வது மண்டலத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு 5வது மண்டலத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சிகள் பட்டியலில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு தாம்பரத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிகள் பட்டியலில் இராமேசுவரத்திற்கு முதல் பரிசும், திருத்துறைப்பூண்டிக்கு இரண்டாம் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மூன்றாம் பரிசு மன்னார்குடிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பேரூராட்சிகளுக்கான பட்டியலில், விக்கிரவாண்டிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு ஆலங்குடிக்கும், மூன்றாம் பரிசு வீரக்கல்புதூருக்கும் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளுக்கான ஆண்கள் பிரிவில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சி. தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரா. தினேஷ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கோ.கோபி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ப. ராஜசேகர் ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளுக்கான பெண்கள் பிரிவில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த மு.விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த செ.சந்திரலேகா, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தா.கவிதா தாந்தோனி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம், மதுரை தெற்கு மண்டலத்தின் காவல்துறை தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக ஐபிஎஸ் அதிகாரி ஆஸ்ரா கர்க்கிற்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதே போன்று கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் மா.குணசேகரன், நாமக்கல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சு.முருகன் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஆர்.குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading