பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக 11-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று முழு ஊரடங்கு காரணமாக ஏற்கனவே இன்றைய தேதிக்கு முன்பதிவு செய்தவர்கள் பணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 19-ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துக்களுடன் சிறப்பு பேருந்துகள் உட்பட முக்கிய ஊர்களில் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.