வரும் தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும் திமுக தலைமை நிலையச் செயலாளருமான பூச்சி முருகன் இல்லத் திருமண விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா கட்டுப்பாட்டுடன் இந்த திருமணம் நடைபெற்று கொண்டிருக்கிறது, அதற்கு பூச்சி முருகனை வாழ்த்துகிறேன், நன்றியும் கூறுகிறேன் என்று தெரிவித்தார். பூச்சி முருகனை பலர் பூச்சி என்று அழைக்க, தாம் மட்டும் முருகன் என்றே அழைப்பேன் என்றும், ஏனெனில் தனக்கு முருகன் மீது அன்பும், பாசமும் உண்டு என தெரிவித்தார்.
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயர் தான், எனக்கு மட்டுமே காரணப் பெயர்தான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், உங்களது பிள்ளைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள் என மணமக்களிடம் வலியுறுத்தினார்.