தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஆண்கள் தயவு இல்லாமல் பெண்களே முழுவதுமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இது பற்றிய செய்தி தொகுப்பு காணலாம்
தமிழகம் முழுவதும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பெண்கள் பாலின
சமத்துவத்தை வலியுறுத்தி பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி மற்றும்
கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆண்களுக்கு நிகராக
பெண்களே கொத்தனார், நிமிர்ந்தால், சித்தாள், கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு
கட்டுமானப் பணிகளை பெண்கள் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் குழுவாக
இணைந்து தற்போது கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவது ராமநாதபுரம் மாவட்ட
பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்கள் தான் இந்த தொழில் செய்ய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி பெண்களும் கட்டுமான பணி மற்றும் கொத்தனார் பயிற்சி செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர்
இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர்
சசிகலா தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுமார் 45 பேர் கட்டுமான
பணிக்காக 40 நாட்களாக பயிற்சி மேற்கொண்டார்கள். அதில் மகளிர் குழு உறுப்பினர்கள் கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் பணி, சிமெண்ட் உரை தயாரிக்கும் பணி போன்றவற்றை சிறந்த முறையில் பயிற்சி பெற்றனர்.
இதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தலைமையிலான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜைகள வெகு சிறப்பாக துவங்கியது. இதில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையேற்று பூமி பூஜை பணியினை துவக்கி வைத்தார்.
இந்த அங்கன்வாடி மையம் 2022-23 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தெரிவித்ததாவது..
” பெண்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகின்ற காலகட்டத்தில், நாங்களும் கட்டிடம் கட்டுவதற்கு சிறந்தவர்களாக தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எங்கள் சுய உதவி குழுவிடம் கேட்டதற்கு இணங்க, சிறந்த முறையில் கட்டுமான பணிகளை கற்றுக் கொண்டோம். அதன் ஒரு பகுதியாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவித்தார். மேலும் இந்த கட்டிடத்தையும் முழுமையாக ஆண்கள் உதவியின்றி நாங்களே ஆறு மாத காலத்தில் கட்டி முடித்து காண்பிப்போம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்
நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..
“ தமிழகத்தில் முதல் முறையாக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் கொத்தனார் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான அரசு உதவிகளையும் செய்து வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய பெண்களுக்கு கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இதை செய்து வருகிறோம்.
ஆண்கள் மட்டுமே செய்து வந்த கொத்தனார் கட்டுமான வேலைகளை இனிமேல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களும் ஈடுபடுவார்கள். அரசு துறைகளின் சார்பில் உள்ள கழிப்பறைகள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுமான பணிகளை இனிமேல் பெண்கள் மூலம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களது தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் பெண்கள் பின்தங்கிய உள்ள நிலையை மாற்றி கொத்தனார் தொழிலுக்கு ரூபாய் ஆயிரம் வரை சம்பாதிக்கும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பெண்கள் நன்றி தெரிவித்துக்
கொண்டனர் இதேபோல ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து சுய உதவி குழு பெண்களுக்கும் கட்டுமான பணிகள் குறித்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொழில் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக இருப்பதாக கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.