முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும் தென்மேற்கு பருவகாற்று காரணமாகவும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மிக கனமழையும், தென்காசி, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை மத்திய சிறையில் இருந்து மேலும் 15 கைதிகள் விடுதலை

Web Editor

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

இரட்டை கொலை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Halley Karthik