29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி

உக்ரைனில் சிக்கி தவித்த தமிழ்நாடு மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமை ச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலை தொடர்ந்து, அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக மத்திய அரசு மீட்கத் தொடங்கியது. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு சார்பில் மக்களவை உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: சென்னை உட்பட பிற நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும் – ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

உக்ரைனிலேயே தொடர்ந்து தங்கி இருக்க விருப்பம் தெரிவித்த மாணவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதற்குமுன், உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இறுதிக் கட்டமாக தமிழ்நாடு திரும்பிய 9 மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

உக்ரைன் போர் காரணமாக இதுவரை உக்ரைனில் இருந்து 1,890 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர். இதில் இறுதிக் கட்டமாக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப்பிய 9 மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களிடம் பயணம் குறித்தும் உக்ரைன் சூழல் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பி.ராஜா கலாநிதி வீராச்சாமி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய திருச்சி சிவா, இந்த காலத்தில் மாணவர்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளனர். குறிப்பாக மொழி பிரச்சினையை சந்தித்தனர். உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்தவுடன் தமிழக அரசு அதிகாரிகள் உதவினர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading