தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகவும் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
இதமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் மற்றும் 33 அமைச்சர்கள் இடம் பெறலாம். தற்போது முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
தவெக சார்பில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் முன்மொழியப்பட்டுய்ள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்து புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இவ்விழா நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.







