மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை ஊக்குவிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11வது உலகத் தமிழ் மாநாடு ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று நடைபெறுகிறது. 2ஆம் நாள் நிகழ்வில் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் தமிழ் மொழி கற்பதை ஊக்குவிப்பதாகவும், பள்ளிகளில் தமிழை கூடுதல் மொழியாக மாற்ற முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்திய ஆய்வியல் துறைக்கு கூடுதலாக 20 லட்சம் வெள்ளியை வழங்குவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.







