பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் கொட்டுக்காளி!

ஐரோப்பாவின் முன்னோடியான திரைப்படவிழா எனும் பெருமைக்குரிய  பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ‘கொட்டுக்காளி’ படம் திரையிடப்பட்டது.   சூரியின் மூன்று திரைபடங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூரி.…

ஐரோப்பாவின் முன்னோடியான திரைப்படவிழா எனும் பெருமைக்குரிய  பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ‘கொட்டுக்காளி’ படம் திரையிடப்பட்டது.  

சூரியின் மூன்று திரைபடங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறிய ஒருசில நடிகர்களுள் இவரும் ஒருவர். சூரி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில், கதாநாயகனாக தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி கொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா மீது சூரிக்கு இருந்த அளவற்ற ஆர்வத்தின் காரணமாக சொந்த ஊரான மதுரையை விட்டுச் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு முழுமூச்சாக சினிமாவிலேயே இறங்கி, சினிமா சார்ந்த வேலைகளிலேத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அடுத்தபடியாக திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களிலும் நடிக்கத் துவங்கிய இவர் ‘சங்கமம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் சில நொடிகள் திரையில் தோன்றியிருக்கிறார். அதே போல வின்னர், தீபாவளி போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளிலும், சின்னத்திரையில் குறுகிய வேடங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாத்துறையில் தொடர் முயற்சியில் முற்றிலுமாக இறங்கிய சூரிக்கு அவரது கடின உழைப்புக்கான பரிசாக, இயக்குநர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்திரைப்படத்தில் பரோட்டாவை வைத்து அவர் செய்த சேட்டையைக் கண்டு சிரிக்காதோர் இருக்கவே முடியாது. அதன் பிறகு அவர் ‘பரோட்டா சூரி’ என்று பலராலும் அறியப்படத்துவங்கினார். அதனைத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. தேடி வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சூரி, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னோக்கி நகரந்தார். முன்னனி நடிகர்களான ரஜினி, சூர்யா, அஜித், விஜய், கார்த்தி, சிவகார்த்திக்கேயன் போன்ற நடிகர்களோடு இணைந்து காமெடியனாக நடித்து தனது நகைச்சுவைத் திறமையின் மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்கவைத்திருக்கிறார் சூரி.

திரையில் காமெடியனாக வெளிவந்த சூரிக்கு இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தில் ஹிரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் சூரியின் சினிமாப் பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை பாகம் 1 படத்தில் சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளை அவர் கையாளும் விதமும் திரையில் பார்க்கும் ரசிகர்களை சிலிர்ப்பூட்டச் செய்தன. பின்னர் தொடர்ந்து இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ மற்றும் துரை செந்தில் குமாரின் ‘கருடன்’ என அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

நடிகர் சூரியின் ‘விடுதலை’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ என இவ்விரண்டு திரைப்படங்களும், 2024 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. அதே சமயத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா 2024 க்கிற்கு தேர்வாகியுள்ளது. இது தொடர்பான செய்திகளும் மற்றும் புகைபடங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இது குறித்து சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை பார்த்து கொண்டாடியதில் பெரும் மகிழச்சி; நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர், வினோத்ராஜுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.