28.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

இந்த வெற்றிக்கு பிறகுதான் சூரி கவனமாக இருக்க வேண்டும் – விஜய் சேதுபதி அட்வைஸ்

விடுதலை படத்திற்கு கிடைத்துள்ள வெற்றிக்கு பிறகுதான் சூரி கவனமாக இருக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு தேனாம்பேட்டை ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்ததாவது..

” இந்த படத்தின் வரவேற்பு மூலம் மகிழ்ச்சியில் திகைத்து போய் உள்ளேன் . காலையில் படம் வெளியாகும் போது வெற்றி எனக்கு போனில் அழைத்தார். எல்லா டார்சர்களை சகித்து கொண்டு படம் நடித்து கொடுத்ததற்கு நன்றி என்று  சொன்னார். நான் களிமண் போல தான்  எந்த முன்முடிவும் இன்றி  சென்றேன். இயக்குனரிடம் இருந்து தான் நான் எல்லாவற்றையும்  பெற்று கொண்டேன்.

நாம் பேசுகிற மொழி என்பது நீண்ட நாட்களுக்கு பிறகு தான் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு உணர்வு தான் எல்லாம். எனக்கும் ராஜிவ் மேனன் நடக்கும் காட்சியின் போது வெற்றிமாறன் பரபரப்பாக இருந்தார். பின்னர் வெற்றி மாறனின்  நிதானத்தின் வழியாகத்தான் நான் எல்லாவற்றையும் செய்து முடித்தேன்.

சரக்கு அடித்து விட்டு போதையில் பேசினால் கூட நான் வெற்றிமாறன் உடன் மரியாதை தான் பேசுவேன். எனக்கு இன்னும் அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளது. சமையல் செய்து கொண்டே இருக்கும் போது அது குறித்து சிலர் கேள்வி கேட்பார்கள்.  அப்படி தான் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார் எப்படி உள்ளது படம் என்று. அவர் ஒரு அற்புதமாக இயக்குனர். நிறைய வாசிக்க கூடியவர்.

இதனையும் படியுங்கள்: விடுதலை படத்தின் வெற்றி விழா : கண்கலங்கியபடியே நன்றி தெரிவித்த நடிகர் சூரி

படத்தில் சொல்வது போல அவர் மேலே இவர் கீழே என்று அவர் யாரையும் நடத்தியது இல்லை. விஜய் சேதுபதி தனியாகவும் வாத்தியாரை தனியாவும் இருப்பதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் வாத்தியார் என்பது வெற்றிமாறன் தான்  நான் இல்லை அதற்கான அறிவும் எனக்கு இல்லை. நான் வெறும் ஸ்பீக்கர் மைக் மாதிரி தான் அதன் பின்னால் இருக்கும் சிந்தனை அவர் தான்.

என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் பணம் போட்டவர்களுக்கு அது கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் வெற்றிமாறன். தனக்கு என்ன வேண்டும் என தெளிவாக இருப்பவர் தான் வெற்றிமாறன்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் போது இருந்தே  சூரியை  எனக்கு தெரியும். சூரியிடம் எனக்கு தோன்றுவதை எல்லாம் பேசிக் கொள்வோம். சூரி வெற்றிமாறன் மீது நம்பிக்கை வைத்து பல போராட்டங்களை கடந்து வந்து இந்த நாளுக்காக வந்துள்ளான் என்பது தெரியும். இது சூரிக்கான வெற்றி. வெற்றிமாறன் கொடுத்த வெற்றி.

இதற்கு மேல் தான் கவனமாக இருக்க வேண்டும். சூரியை  யார் என்ன சொல்வார்கள் என்று தெரியும். யார் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவர் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த காடு வேல் ராஜ் கட்டுப்பாட்டில் உள்ளது என்று இரண்டாம் பாகம் வரும்போது தெரியும்.  காட்டின் ராஜா வேல்ராஜ் தான். இந்த படம் என்னுடைய நியாபகத்தில் கல்வெட்டில் பொறித்தது போல இருக்கும்.” என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading