சந்திரயான்-3 சாதனைக்காக இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட பதிவுக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியது.
இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் என்ன ஒரு நம்பமுடியாத தருணம்! நிலவில் சந்திரயான்3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது” என தெரிவித்திருந்தார்.
இதற்கு X தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். சூப்பர் கூல் என எலான் மஸ்க் சுந்தர் பிச்சையின் பதிவுக்கு பதில் தந்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.