“மாற்றத்திற்கான மாணவிகள்” வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் சமூக அறிவியல் துறையின் முதுகலை மாணவிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசனின் 2020-21 முதல் 2021-22 வரை நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். மாணவிகள் நடத்திய அந்த ஆய்வு அறிக்கையை சமர்பித்து மாணவிகள் தங்களுடைய பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் மாற்றத்திற்கான மாணவிகள் எனும் வாட்ஸ் அப் குழுக்கள் துவங்கப்பட்டது.
அதுகுறித்து குறித்து பேசிய அவர், “முதலில் இந்த திட்டத்திற்கு பெயர் வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் இது ஒரு நீண்ட கால திட்டம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண்களும் இந்த குழுவில் இருப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. முதலில் டோக் பெருமாட்டி கல்லூரியின் அனைத்து துறையின் மாணவத் தலைவர் அந்த குழுவில் இணைக்கப்பட உள்ளனர்.
இந்த குழுவில் மாணவர்களின் கேபினெட், மற்றும் கல்லூரியின் முதல்வர், நான் உள்ளிட்ட மதுரை நாடாளுமன்ற அலுவலகத்தின் பொறுப்பாளர், அந்த குழுவில் இருப்போம். இந்த குழுவில் சமூகம், கல்வி, அரசின் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் உரையாடும் தளமாக இது அமையும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்த காணொலி காட்சியை டிவிட்டரில் பதிவிட்ட அவர், மக்கள் தொகையில் 25 வயதிற்கு குறைவானோரின் எண்ணிக்கை 50% கடந்துவிட்ட நிலையில் இளையோரின் குரலே இந்தியாவின் குரல் என பதிவிட்டிருந்தார்