ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிக்காத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியார்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், மீளவிட்டான் உள்ளிட்ட, ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவுதினம், குமரெட்டியார்புரத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிந்த ஸ்னோலின், தமிழரசன், ஜான்சி, கந்தையா, கிளாஸ்டன், பரத்ராஜ், உள்ளிட்டோரின், அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.