தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா கனி, கல்லுாரி செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் பெரியார் அம்பேத்கர் கண்ட கனவு, கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர், ஜனநாயகம், என 15 தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.