கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
கோவையில் கடந்த 2010ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். இதன்படி கோவை மத்திய சிறையை இடம் மாற்றி விட்டு, அந்த இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், அதிமுக ஆட்சிக்கு வந்ததால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கோவையில் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், காந்திபுரத்தில் சர்வதேச தரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும், இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயார் செய்ய உள்ளது.