புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள சோழர் கால மாதிரி செங்கோலை தயாரித்த உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் குடும்பத்தினருக்கு ஆரிய வைஸ்யர் மஹா சபை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள சோழர் கால மாதிரி செங்கோல் சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டதாகும். அவர்களை கெளரவிக்கும் வகையில், சென்னையில ஆரிய வைஸ்யர் மஹா சபை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், உம்மிடி பங்காரு குடும்பத்தினரான உம்மிடி சுதாகர், உம்மிடி ரகுநாத், உம்மிடி குப்புராஜ் மற்றும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோலால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பங்காரு குடும்பத்தினர் குறித்து தெரிந்து கொண்டதாக உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சோழர் கால மாதிரி செங்கோலை உருவாக்கியது பெருமையாக இருப்பதாகவும், இந்த செங்கோல் நாடாளுமன்ற எப்பொழுதும் காட்சியளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டிய உடனே பிரதமர் மோடி இந்தியாவில் பல சமஸ்தானங்களில் பல செங்கோல்கள் இருந்தாலும், இந்த செங்கோலை நாடாளுமன்ற முகப்பில் வைக்க வேண்டும் என்று விரும்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா கூறியுள்ளார். உம்மிடி பங்காரு உருவாக்கிய இந்த செங்கோல், இன்னும் பல நூறு ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் காட்சியளிக்கும் என்றும், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்றார்.
- பி.ஜேம்ஸ் லிசா