குடும்பங்களின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தனிநபர் வருமானம் எப்படி ஒரு முக்கியமான அளவீடாக இருக்கிறதோ, அதேபோல் நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை கணக்கிடுவதில் அந்நாட்டின் குடும்பங்களின் சேமிப்பு அளவும் முக்கிய காரணியாக உள்ளது. இந்நிலையில் 50 வருடத்தின் மோசமான நிலை என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”இந்தியாவின் குடும்பங்களின் மொத்த சேமிப்பானது 2022-23-ம் ஆண்டில் ரூ.13.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1% ஆகும். இது கடந்தாண்டில் 7.2% ஆக இருந்தது. 2020-2021-ம் ஆண்டில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில்கூட அதற்கு முந்தைய ஆண்டின் சேமிப்பு விகிதமான 8.1% இருந்து 11.5% ஆக உயர்ந்திருந்தது.கடந்த காலத்தை ஒப்பிடும் போது அஞ்சல் சேமிப்பு, வங்கிகளில் நிலையான வைப்பு நிதி, சிறு சேமிப்பு, முதலீடுகள் என அனைத்திலும் குறைவாகவே உள்ளது. 2021 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வணிக வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடன் 54% அதிகரித்துள்ளது. அதேபோல், குடும்பத்தின் சராசரி கடன் 36.9% லிருந்து நிகழ்வாண்டு 37.6% ஆக உயர்ந்துள்ளது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களில் சேமிப்பு நிதி குறைந்த போதிலும் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.