80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்தால், அனுமதி வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வழிநடத்தல் குழுவினர், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டமன்றத் தேர்தலின்போது மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாஹூ, மாற்றுத் திறனாளி வாக்காளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 80 வயதுக்கு மேற்பட்டோர், தபால் வாக்கு கோரி விண்ணப்பித்தால், அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த சத்யபிரதா சாஹூ, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் விரும்பினால், தபால் வாக்கு செலுத்தலாம் என தெரிவித்தார்.