‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

பிரபல இந்தி திரைப்படமான ‘கபி கபி’ கதையாசிரியர் மற்றும் எழுத்தாளரும் சாகர் சரஹாடி (88) வயது மூப்பு காரணமாக மும்பையில் நேற்று இரவு காலமானார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 1976-ம் ஆண்டு ‘கபி…

பிரபல இந்தி திரைப்படமான ‘கபி கபி’ கதையாசிரியர் மற்றும் எழுத்தாளரும் சாகர் சரஹாடி (88) வயது மூப்பு காரணமாக மும்பையில் நேற்று இரவு காலமானார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 1976-ம் ஆண்டு ‘கபி கபி’ படத்திற்கான கதையை எழுதியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சாகர் சரஹாடி. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வயது மூப்பின் காரணமாக மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.

இதுகுறித்து சாகரின் உறவினரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரமேஷ் தல்வார் கூறுகையில் அவர் சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சாகர் சாகர் சரஹாடி ‘சில்சிலா’, ‘பஜார்’ உள்ளிட்ட பிரபலமான பழைய இந்தி திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.