உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவங்களைக் குவித்துள்ளதால், இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கச் சென்ற ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒலிம்பிக் நடப்பதற்கு முன்னதாக நடந்த சந்திப்பில்,ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டுத் தலைவர்களும் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்களும் விவாதித்தனர்.
சந்திப்புக்குப் பின் இரு நாட்டு அதிபர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி கொடுத்த புதின் “ரஷ்யாவும் சீனாவும் கண்ணியமான உறவுக்கு எடுத்துக்காட்டு. சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள் நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையின் பாதையில் படிப்படியாக வளர்ந்து வருகின்றன . ஜின்பிங்கை நான் நீண்ட காலமாக அறிவேன். நாங்கள் இருவரும் உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள். நாங்கள் எப்போதும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது