சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில், ரூ.24.29 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற பெண் உட்பட 3 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து இலங்கை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியார் பயணிகள் சிறப்பு விமானம் இன்று காலை 11.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 106 பயணிகள் பயணிக்க இருந்தனா். அப்போது, அந்த பயணிகளை சுங்கத்துறையினா் கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சோடதனையின்போது, சென்னையை சோ்ந்த பெண் பயணி உட்பட 3 பயணிகள் ஒரு குழுவாக அந்த விமானத்தில் இலங்கை செல்ல வந்தனா். அவா்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுடைய கைக்பைகளில் ரகசிய அறைகள் வைத்து தைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா்.
அண்மைச் செய்தி: இலங்கை சிறையில் 21 இந்திய மீனவர்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அந்த ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா், கரண்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது, 3 பயணிகளிடமிருந்து ரூ.24.29 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் மற்றும் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தனா். அத்தோடு, அந்த 3 பேரின் பயணங்களையும் ரத்து செய்தனா். மேலும், 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.