ரூ.19,744 கோடி ஆரம்பக்கட்ட மதிப்பீட்டிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருள்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான மையாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டு, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவை குறைப்பதற்கு இந்த ஊக்கத்தொகை திட்டம் உதவும். ரூ.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீட்டிலான இத்திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாறுவதற்கான உத்திசார் இடையீட்டு திட்டத்துக்கு ரூ.17,490 கோடி, சோதனை அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு ரூ.1,466 கோடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.400 கோடி இதர அம்சங்களுக்கு ரூ.388 கோடி செலவிடப்படும் என்று கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் வாயிலான 2030ம் ஆண்டுக்குள் ரூ.8 லட்சம் கோடிக்குள் முதலீடுகள் ஈர்க்கப்படும். 6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக புதைபடிம எரிபொருள் இறக்குமதி குறையும். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறைக்கப்படும். இத்திட்ட அமலாக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் வகுக்கப்படும் என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.