#RRvsPBKS – பஞ்சாப் அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.  2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி…

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 64 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.

இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும் என போட்டி தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 65 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்க்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவுகளில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை குவித்துள்ளது. இதன்மூலம் 145 ரன்களை பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.