வேதாரண்யம் அருகே மைல் கல்லுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுத பூஜையை சாலை பணியாளர்கள் கொண்டாடினார்கள்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம்
நெடுஞ்சாலையில் தகட்டூரில் சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆயுத
பூஜையைக் கொண்டாடினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் மைல்கல்லை குளிப்பாட்டி மஞ்சள்பொடி, திரவியபொடி, தேன், சந்தனம்,
பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
பின்பு மைல் கல்லுக்கு சந்தனம் குங்கும பொட்டு வைத்து, மாலை அணிவித்து வாழை
மரம் கட்டி தாங்கள் பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட உபகாரணங்களை வைத்து தேங்காய் உடைத்து சுண்டல், பொட்டு கடலை, சர்க்கரை வைத்து தீபாரதனை செய்து வழிபட்டனர்.
பின்பு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி சுண்டல் பழங்களை வழங்கினர்.
ஆயுத பூஜை என்றால் வழக்கமாக மக்கள் தாங்கள் பயபடுத்தும் தொழிற்சாலைகளில்
தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடுவார்கள். ஆனால் வேதாரண்யத்தில் நெடுஞ்சாலை துறையினர் தங்கள் ஆண்டு முழுவதும் சாலையில் வேலை செய்வதால் தாங்கள் தெய்வமாக நினைக்கும் மைல் கால்லுக்கு ஆயுத பூஜை வழிபாடு நடத்தியது இப்பகுதி மக்களையும் வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்தது.