சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.19 டாலராக அதிகரித்துள்ளது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் தகவலால் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்துள்ளது. ரஷியாவில் இருந்து எரிபொருள் வினியோகம் தொடர்ந்து தடைபடும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 185 டாலர்களை எட்டும் என்று ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 139.13 டாலராக அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலையை எவ்வளவு உயர்த்தலாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.