ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சில்லறை நேரடித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குறைத்தீர்ப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு திட்டங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியில் காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கியின் இரண்டு திட்டங்களும் நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்தும் என தெரிவித்தார் மேலும், முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுச் சந்தைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுகுவதற்தாக திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாத சொத்துகள் வெளிப்படைத்தன்மையுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பிரதமர், ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பு என்ற முறையை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.