அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் நியமனம் குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தகவல் அனுப்பியுள்ளது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியனைக் கூண்டோடு நீக்கி பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோரைச் சமீபத்தில் நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம் நீக்குவதாக அறிவித்தார். ஆனால், வைத்தியலிங்கத்தை அதே பொறுப்பில் ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமித்திருந்தார்.
அண்மைச் செய்தி: ‘கணியாமூர் வன்முறை – 3 பேர் கைது’
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நீக்கம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியனின் நியமனம் குறித்துத் தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தகவல் அனுப்பியுள்ளது. சமீப காலமாக ஓபிஎஸ் தரப்பு இபிஎஸ் தரப்பு எதிராகவும், இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பி இந்த விவகாரத்தில் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடுவதாகவும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.