28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், இலங்கை சுதந்திர கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, 2019 ஆம் ஆண்டில் தனது ஆட்சியின் போது நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் அவர், தான் எந்த சதிக்கும் அஞ்சி பின்வாங்குவதாய் இல்லை என்றும், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிப்பதாகவும் தெரிவித்தார். எத்தகைய பிரச்னைகள் நேர்ந்தாலும், அடுத்த அதிபர் தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். அடுத்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில், கடந்த 2019 ஆண்டு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கை ரூபாய் மதிப்பில் 10 கோடி ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading