திங்கள்கிழமை காலை தில்லி-என்சிஆர் பகுதியில் பெரும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
நகரில் கிட்டத்தட்ட 1.5 மணி நேரத்தில் 11 டிகிரிக்கும் அதிகமான பனிப் பொழிவு இருந்தது.
விமானப்போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தடைபட்டது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கியது. மின்தடையும் ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் தாமதமாக வந்ததாகவும், 19 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரங்கள் விழுந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. குருகிராமிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 90 கிமீ வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சூறாவளி காற்றுடன் தலைநகரில் கன மழை!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.