29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தல்: உம்மன் சாண்டி மகன் வெற்றி!

கேரளா மாநிலம் புதுப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் வெற்றி பெற்றுள்ளார்.

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவை அடுத்து அவர் தொகுதியான புதுப்பள்ளி காலியாக இருந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனும், மாாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் ஜெய்க் சி.தாமசும், பா.ஜனதா சார்பில் லிஜின் லாலும் போட்டியிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் தனக்கு எதிராக போட்டியிட்ட இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜெயிக் தாமஸை விட 36,454 வாக்குகள் அதிகம் பெற்று சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். அவர் 78,098 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட 6,5580 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

கடந்த 2011 தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி 33,255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த சாதனையை அவர் மகன் சாண்டி உம்மன் தற்போது முறியடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram