தமிழகத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளை திடீரென உயிரிழந்ததால் மாட்டிற்கு பிளக்ஸ் வைத்து பாரம்பரிய
முறைப்படி ராஜமரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்திய காளை
ஆர்வலர்களின் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி
என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை தமிழகத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு
போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வென்ற இந்நிலையில் திடீரென காளை
உயிரிழந்ததால் இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடம் சோகத்தை
ஏற்படுத்தியது. அதன் பின் இறந்த ஜல்லிக்கட்டு காளையின் உடலை ஊரார்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு நடத்தினர். ஜல்லிக்கட்டு
ஆர்வலர்கள் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி காளைக்கு வேஷ்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே
நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழர்கள் ஜல்லிக்கட்டு காளையை தங்களின் வீட்டில் ஒரு நபராக வளர்த்து வரும்
நிலையில் திடீரென காளை இழப்பு ஈடு செய்ய முடியாத சோகத்தை ஊர் மக்களிடையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
ரெ. வீரம்மாதேவி
ஜல்லிக்கட்டு காளைக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.